எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?

எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 26, 2025 12:29 AM IST

‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று தமிழ் மற்றும் ஹிந்தியில் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?
எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?

மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க, பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக குழுவாகவும், தனியாகவும் அதிமுகவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய அமித்ஷா, இருதரப்பு கோரிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.

பேச்சுவார்த்தை திருப்திகரமாக நிறைவுபெற்றதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர், மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு, கிட்டத்தட்ட அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது.

ராஜ்ய சபாவில் திமுக அரசுக்கு எதிரான தன்னுடைய பேச்சு அடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ள அமித்ஷா, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று தமிழ் மற்றும் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அமித்ஷா நேரடியாக, ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு’ என்று கூறியிருப்பது, அதிமுக தலைமையிலான கூட்டணியை தான் என்பது கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம், திமுக அரசை, அதிமுக கூட்டணியோடு தமிழகத்தில் அகற்ற அமித்ஷா எடுக்கும் முயற்சியை அறிந்து கொள்ள முடிகிறது. பாஜக-அதிமுக கூட்டணி குறித்து மறைமுக பேச்சுகள் இருந்து வந்த நிலையில், அமித்ஷாவின் இந்த பதிவு, கிட்டத்தட்ட உறுதி செய்யததைப் போலவே உள்ளது.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.