Anna's Achievements: முறியடிக்க முடியாத பேரறிஞர் அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!முதலமைச்சராக அப்படி என்ன செய்தார் அண்ணா ?
Anna's Achievements: முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்ட ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு. அந்த வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரை. முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம்.
ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய் திருநாட்டுக்கு '' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களை செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. 'இவர்களை விட்டு வைக்கலாமா?' ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 'முடியுமா ?' என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், ஆட்சியை கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்ததை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது 'மக்கள் வெகுந்தெடுவார்களே !' என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா ? அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் ! ~ இவை முதலமைச்சராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகள்..
1. தாய்த் திருநாட்டிற்கு ' தமிழ்நாடு ' என்று பெயர்
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப் போவது என்ன என்று கேட்கிறீர்கள். பதிலுக்கு நான் கேட்கிறேன், பார்லிமென்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள் ?
மெட்ராஸ் என்று தொடர்வதில் தவறில்லை என்றாலும் தமிழ்நாடு என்ற பெயர் தரும் உணர்வுக்காக தனித்தன்மைக்காக அந்த வார்த்தையில் உள்ள தொன்மைக்காக பெயர் மாற்றக் கோறுகிறோம்.
பிள்ளைக்குத் தாய் பெயர் சூட்டும் நிகழ்வுகளை நாளும் நாம் பார்க்கலாம். ஆனால், தாய்க்கு ஒரு பிள்ளை பெயர் சூட்டுகிற பெருமையை பேரறிஞர் அண்ணா பெற்றார். இந்த மாநிலத்திற்கு ' தமிழ்நாடு ' என்று பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போன்ற தியாகிகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார்.
2. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்
சுயமரியா திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களுக்கும் இது பொருந்தும் என்று இயக்கி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெடுந் தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் - தந்தை மிகப் பிடித்தமான பொருளை கொண்டு வந்து கொடுப்பதைப் போல நாங்கள் தந்தை பெரியார் அவர்களிடம் இக்கனியை (சட்டத்தை) சமர்ப்பிக்கிறோம்.
3. இருமொழிக் கொள்கை
தமிழ்நாட்டிற்கு இந்தி தேவையில்லை எனக்கூறி சட்டமன்றத்தில் இந்தி ஒழிப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றினோம்.
ஆங்கிலம் என்பது அறிவியல் மொழி. இராஜாஜி கூறியதைப் போல் அது உலகத்தின் சாளரமாகும். அறிவியலும், தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள ஆங்கிலம் போதும்.
எனவே, ஒவ்வொருவருடைய தாய் மொழியும், ஆங்கிலமும் போதும். பிற மாநில, மத்திய அரசுடன் தொடர்பிற்கு ஆங்கிலமே வேண்டும் என்பது அண்ணாவின் அறுதியிட்ட மொழிக்கொள்கை ஆகும்.

டாபிக்ஸ்