சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!

சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!

Karthikeyan S HT Tamil
Published Mar 25, 2025 01:42 PM IST

Chain Snatching: சென்னையில் செயின் பறிப்பை நடத்திவிட்டு விமானம் மூலம் தப்பிக்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை விமானத்தை நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!
சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!

திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் 20 சவரனுக்கும் மேல் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

விசாரணையில் இறங்கிய காவல்துறை

பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம், இருசக்கர வாகனத்தில் வந்தது இருவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்கள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னையில் செயின் பறிப்பை நடத்திவிட்டு விமானம் மூலம் தப்பிக்க முயன்ற வட மாநில கொள்ளையர்களை விமானத்தை நிறுத்தி வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சூரத், ஜாபர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும், செயின் பறிப்பு சம்பவத்தின் பின்னணியில் யாரெனும் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?

கடந்த ஜனவரி மாதம் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் விமானம் மூலம் தப்பிச் செல்வது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த கொள்ளையர்கள் சிக்கி இருக்கிறார்கள். இந்த முறை சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று அங்கிருந்து உத்தரப்பிரதேசம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விமான நிலையத்துக்கு பறந்த எச்சரிக்கை

செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற சாலைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் விமான நிலையம் செல்வதை போலீசார் முதலில் உறுதி செய்துகொண்டனர். விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதனை பணிகள் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.