சமூகநீதியை நிலைநாட்ட.. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - தவெக தலைவர் விஜய் அறிக்கை
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்த் சாதிவாரி கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்த கோரிக்கையானது, இந்திய ஒன்றியம் எங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பாஜக அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
வேறு வழியின்றி சாதிவாரி கணக்கெடுப்பு
இந்த கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதி தேதி அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழு முதல் கோரிக்கையாக இந்த சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.