’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!

’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!

Kathiravan V HT Tamil
Published Feb 26, 2025 12:36 PM IST

’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!
’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!

தவெக தலைவர் விஜய் பேச்சு:- 

என்னுடைய நண்பரும், ஜன்சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் அவர்கள் தமிழக வெற்றி கழக 2ஆம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தது மகிழ்ச்சி, அவருக்கு எனது நன்றிகள். 

அரசியல் என்றாலே வேற லெவல்தான். அரசியலில் மட்டும்தான் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள். 

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடித்து போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதை நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில இந்த அதிகார….! இல்லை அது வேண்டாம். 

ஒரு சில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே. என்னடா இவன் திடீர்னு எண்ட்ரி கொடுத்துவிட்டானே. இதுவரை நாம சொன்ன பொய்யை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்களே!, ஆனால் இவன் சொல்வதெல்லாம் பார்த்தால் மக்கள் மனசுக்கு நெருக்கமாக இருக்கிறதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று குழப்பம் வரும். 

அந்த குழப்பத்தில் கத்துவதா, கதறுவதா என்ற செய்வது என்று தெரியாமா? வரவன் போரவனெல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்லி பேசத் தொடங்குவார்கள். 

இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை லெப்ட் ஹாண்டில் டீல் செய்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

இந்த கால கட்டம்தான் மிக முக்கியமான காலகட்டம். ஒரு அரசியல் கட்சிக்கு அதன் கட்டமைப்புதான் அடிப்படை பலம். ஆலமரம் போல் ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அதன் வேர்களும், விழுதுகளும் பலமாக இருக்க வேண்டும். அதனால்தான் அமைப்பை பலம் செய்யும் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். 

இந்த நேரத்தில் நம்மீது ஒரு புகார் வருகிறது. நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் வெறும் இளைஞர்களாகவே உள்ளார்களாம். ஏன் இருந்தால் என்ன?; அறிஞர் அண்ணா அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது அவர் பின்னாடி நின்றவர்களும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் பின்னாடி நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது வரலாறு. 

கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என புகார் வருகிறது. ஏன் வரக்கூடாதா?, சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெருசு, பெருசா சாதித்து உள்ளார்கள். நம்முடைய கட்சி எளிய மக்களின் கட்சிதானே. 

நம்முடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களின் கட்சி கிடையாதே. அந்த காலத்தில் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போ கொஞ்சம் உள்டா, பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாரா மாறிவிடுவிகிறார்கள். 

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.