Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 22, 2025 04:44 PM IST

இது தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என அண்ணாமலை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் தற்போது டங்ஸ்டன் திட்டம் அமலாக்காது என போராட்டக் குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
Tungsten Protest : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடிட்டாபட்டி போராட்டக் குழுவினர் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினார். சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்ட குழுவினர் வலியுறுத்தினார். இது தொடர்ந்து அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என அண்ணாமலை முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில் தற்போது டங்ஸ்டன் திட்டம் அமலாக்காது என போராட்டக் குழுவினரிடம் மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் !

தமிழகத்தின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமான அரிட்டாபட்டிக்கு அருகில் உள்ள 10 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய சுரங்க அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வழங்கியதை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பல கிராமங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய சுரங்க அமைச்சகத்திற்கு தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் நவம்பர் 29 அன்று கடிதம் எழுதியிருந்தார். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மத்தியத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியில் டங்ஸ்டன் மற்றும் ஆந்திராவின் பலேபாளையம் டங்ஸ்டன் மற்றும் அதனுடன் தொடர்புடைய கனிம தொகுதி ஆகியவற்றில் சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் நவம்பர் 7 அன்று பெற்றதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரணியாக செல்லும் கிராம மக்கள்!

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து மக்கள் தன்னெழுர்ச்சியாக போராடி வருகின்றனர். மேலூரில் தொடங்கிய மக்கள் பேரணி மதுரை மாநகரை அடைந்து உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான காவல்துறையின் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நடைபயணாமாக சென்ற மக்களை தடுத்து வாகன பேரணியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், தடையை மீறி நடைபயணமாக மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மக்கள் சென்றனர்.  மேலும் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் வைத்து தொடர் முழக்கங்களை மக்கள் எழுப்பியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் பாஜக  மாநிலத்தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் போராட்ட குழுவினரை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் வராது.  இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிடுவார் என தெரிவித்தார்.  இந்நிலையில் இன்று மதுரை வேலூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 பேர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை  சந்தினர். டங்ஸ்டன் ஏல உத்தரவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் அமலாகாது என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பிரதமருடன் ஆலோசனை நடத்தப்பட்டு எழுத்து பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.