Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்
Trichy Surya: கட்சி பதவியில் இருந்து நீக்கிய கோபத்தில் குற்றம்சாட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையாக என்னிடம் பட்டியல் உள்ளது மத்திய அமைச்சர் முதல் மாநிலத் தலைவர், மாநில அமைப்பு பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர் வரை யாருக்கு எவ்வளவு போனது என என்னால் சொல்ல முடியும் என திருச்சி சூர்யா விளக்கம்.

’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்
'மத்திய அமைச்சர் முதல் மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர்கள் வரை’ மணல் வியாபாரிகளிடம் இருந்து பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாக பாஜகவில் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா கூறி உள்ளார்.
பாஜக தலைமை உடன் உரசல்
பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
”ஆட்டையை போடும் பாஜக பிரமூகர்கள்” - சூர்யா ட்வீட்
இந்த நிலையில் அவரது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில், “திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு , மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே..” என ட்வீட் செய்து இருந்தார்.