ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!
”டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் எட்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”

ED ரெய்டு எதிரொலி! டாஸ்மாக் அதிகாரி வீட்டு வெளியே கிழித்து போடப்பட்ட பேப்பர் துண்டுகள்! எடுத்துச் சென்ற அதிகாரிகள்!
அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தின் வெளியே கிழித்து போடப்பட்ட காகித ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கடந்த மார்ச் மாதம் முதல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் எட்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.