தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published May 10, 2025 09:15 AM IST

4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, சிறுபான்மை மக்கள் குறித்து முதலமைச்சர் பேச்சு, காரைக்காலில் ட்ரோன்கள் பறக்கத் தடை, சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம், தேசியக் கல்விக் கொள்கை குறித்து அன்பில் மகேஸ் கருத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: ’மழை எச்சரிக்கை முதல் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!

1.4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் இன்று காலை வரை திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

2.சிறுபான்மை மக்களின் அரண் 

நானும் திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

3.மதுரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம் 

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12ஆம் தேதி நடக்கும் நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். மே 10ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை செல்லும். மே 12 இரவு 11.30 மணிக்கு மதுரையில் புறப்படும்க் ரயில் ஆனது மறுநாள் காலை 7.50 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரம் வந்து சேரும் என அறிவிப்பு. 

4.ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் 

தேசியக் கல்விக் கொள்கை போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். அரசியலைப்பு சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை.

5.மும்மொழிக் கொள்கை - ராஜ்மோகன் கருத்து 

மும்மொழிக் கொள்கையை திணிக்க முற்படும் பாஜக அரசின் கனவு ஒருநாளும் பலிக்காது. மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மும்மொழிக் கொள்கையில் மாநிலங்களை வற்புறுத்த முடியாது என்பது நீதிமன்றத்தில் நிலைப்பாடு. தேசியக் கல்விக் கொள்கை என்று மாநிலங்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் கருத்து. 

6.சாலையில் சிக்கிய டேங்கர் லாரி 

சென்னை துரைப்பாக்கம்-நீலாங்கரை இணைப்பு சாலையில் மழைநீர் வடிகால்வாயில் தண்ணீர் ஏற்றி சென்ற டேக்கர் லாரி சிக்கி விபத்து. சாலையில் பள்ளம் ஏற்பட்டு புதைந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். 

7.1750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில், 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். கடத்தலுல் ஈடுபட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஜெகதீசன் (42) என்பவர் கைது.

8.தவெகவினர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த தவெகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

9.ட்ரோன்கள் பறக்கத் தடை 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

10.சென்னையில் கூடுதல் பாதுகாப்பு 

பாகிஸ்தான் உடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகளுக்கு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு.