இன்றைய முக்கிய செய்திகள்: டெல்லி விரைந்த ஆளுநர் முதல் மேலபாளையத்தில் கடையடைப்பு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இன்றைய முக்கிய செய்திகள்: டெல்லி விரைந்த ஆளுநர் முதல் மேலபாளையத்தில் கடையடைப்பு வரை!

இன்றைய முக்கிய செய்திகள்: டெல்லி விரைந்த ஆளுநர் முதல் மேலபாளையத்தில் கடையடைப்பு வரை!

Kathiravan V HT Tamil
Published Apr 18, 2025 09:40 AM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம், விண்வெளிக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு, இலகை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இன்றைய முக்கிய செய்திகள்: டெல்லி விரைந்த ஆளுநர் முதல் மேலபாளையத்தில் கடையடைப்பு வரை!
இன்றைய முக்கிய செய்திகள்: டெல்லி விரைந்த ஆளுநர் முதல் மேலபாளையத்தில் கடையடைப்பு வரை!

1.ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி விரைந்தார்

மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவு எடுப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்ளார். 

2.அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை 

அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படக் கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேச்சு சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தல்.

3.மேலப்பாளையத்தில் கடையடைப்பு 

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் நடக்கும் இப்போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு, ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.

4.அட்டை உற்பத்தி ஆலையில் தீ

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்பட்டு வரும் அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீவிபத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

5.வக்ஃப் திருத்த சட்ட உத்தரவு - முதல்வர் வரவேற்பு 

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறு ஆய்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கருத்து. 

6.இஸ்லாமியர்கள் வயிற்றில் பால் வார்த்து உள்ளது

வக்ஃப் வாரிய திருத்த சட்ட வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்கள் வயிற்றில் உச்சநீதிமன்றம் பாலை வார்த்து உள்ளதாக கருத்து.

7.போக்சோ வழக்கில் கைது 

கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் 11ஆம் வகுப்பு மாணவியை கேரளா அழைத்து சென்று திருமணம் செய்த சிவக்குமார் என்பவர் போக்சோ வழக்கில் கைது.  

8.இன்று ஒரு நாள் இலவசம் 

சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த 3 நபர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

10.விண்வெளிக் கொள்கைகு ஒப்புதல் 

தமிழ்நாடு விண்வெளிக் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.