தலைப்பு செய்திகள்: மதிமுகவில் நீடிப்பாரா மல்லை சத்யா?, திமுக கூட்டணியில் பாமக!, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்!
வைகோ குறித்து மல்லை சத்யா வலைத்தள பதிவு, மதிமுக நிர்வாக குழு கூட்டம் இன்று கூடுகிறது, திமுக கூட்டணியில் பாமக இருக்காது என முதல்வர் பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.திமுக கூட்டணியில் பாமக?
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக கூறும் செய்திகள் வதந்திகள்தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த கூட்டணி மாறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
2.மல்லை சத்யா முகநூல் பதிவு
வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் அவர் முகம் பதித்த மோதிரம்தான். என் சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இருப்பதுதான் என் அடையாளம், என்றும் மறுமலர்ச்சி பாதையில் எனக் குறிப்பிட்டு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா முகநூல் பதிவு.
3.மதிமுக நிர்வாக குழு கூட்டம்
பரபரப்பான ஊழலில் மதிமுக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகலை ஏற்பது குறித்து ஆலோசனை நடக்கும் என எதிர்பார்ப்பு.
4.வேளாங்கண்ணியில் ஈஸ்டர் விழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தத்ரூப காட்சிகள் கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
5.கழிவுநீர் கலந்த நீரை குடித்து 3 பேர் உயிரிழப்பு
திருச்சியில் கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 3 பேர் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு நடவடிக்கை எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கருத்து.
6.விண்வெளிக் கொள்கையால் தமிழகம் உயரும்
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல் உயரும். விண்வெளிக் கொள்கை குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்த நிலயில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.
7.திமுக ஆட்சியை இழக்கும் - நயினார்
இறைவன் என்ன எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் 2026-இல் என்ன எழுத போகிறார் என்று எனக்கு மட்டும் தெரியும். திமுகவை வீட்டுக்கு அனுப்பப்போகிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு.
8.3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு இயலொஐ விட அதிகமான வெப்பநிலை பதிவாகும். ஒரு சில இடங்களில் சேலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
9.கஞ்சா விற்ற தாய், மகன் கைது
சேலம் மாவட்டம் ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய் பூங்கொடி மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் கைது, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
10.பாலியல் தொல்லை தந்தவர் போஸ்கோவில் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மகேஷ் குமார் போஸ்கோ சட்டத்தில் கைது. சிறுமியின் பாட்டி கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

டாபிக்ஸ்