தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
”ஈரோடு இரட்டை கொலை வழக்கு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழ் கலாச்சாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு, தவெக கூட்டணி குறித்து நிர்மல் குமார் பேச்சு, 2026 தேர்தலில் நாதக தனித்து போட்டி என சீமான் அறிவிப்பு”

தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.ஈரோடு இரட்டை கொலை - 4 பேர் கைது
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைகளுக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோரை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார்.
2.18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.