தலைப்பு செய்திகள்: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை முதல் நூலிழையில் தப்பிய ஆ.ராசா வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை முதல் நூலிழையில் தப்பிய ஆ.ராசா வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை முதல் நூலிழையில் தப்பிய ஆ.ராசா வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 09:58 AM IST

”தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை, அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல்நாளிலேயே மழை, நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மீது ஈபிஎஸ் விமர்சனம், மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் மின் விளக்குத்தூண் சரிந்து விழுந்த நிலையில், நூலிழையில் தப்பிய ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!”

தலைப்பு செய்திகள்: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை முதல் நூலிழையில் தப்பிய ஆ.ராசா வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை முதல் நூலிழையில் தப்பிய ஆ.ராசா வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1. தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் உடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிப்பு.

2. அக்னி நட்சத்திரத்துடன் மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலேயே காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

3. நீட் விவகாரத்தில் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

நீட் விவகாரத்தில் திமுகவின் பொய்யால் மாணவ, மாணவிகளின் உயிர் பறிபோவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என ‘எக்ஸ்’ வலைத்தள இடுகையில் கேள்வி.

4. ஜே.பி.நட்டா கார் விபத்து சம்பவம்

வண்டலூர்-மீஞ்சூர் சாலை அருகே மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பயணித்த கார் பழுதடைந்து சிறு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு வழங்கிய பழுந்தடைந்த ப்ரோட்டோகால் வாகனத்தால் மத்திய அமைச்சரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் பங்கம் விளைந்து இருந்தால் தமிழக வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக பதிந்து இருக்கும். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து.

5. மயிலாடுதுறையில் ஆ.ராசா நூலிழையில் தப்பிய சம்பவம்

மயிலாடுதுறையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தபோது மின் விளக்குத்தூண் சரிந்து விழுந்ததால் பரபரப்பு. சுதாரித்து விலகியதால் நூலிழையில் தப்பினார் ஆ.ராசா.

6. திமுக-பாஜக இடையே திட்டங்கள் குறித்த வாக்குவாதம்

பாஜகவுக்கு சேவை செய்யவே நேரமில்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்? 2004-2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம், பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார் என பட்டியல் போட முடியுமா என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி.

7. அதிமுகவின் மதசார்பின்மை உறுதி

கூட்டணிக்காக நாங்கள் எதற்கும் சமாதானமாகப் போகவில்லை. எதையும் விட்டுக்கொடுக்கவும் இல்லை. அதிமுக எப்போதும் மதசார்பற்ற அணிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து.

8. 2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகள் வரும் காலத்தில் இணையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 2026-ஆம் ஆண்டில் வெற்றி அணியாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.

9. சென்னையில் வைர நகை கொள்ளை

சென்னை வடபழனியில் வியாபாரி சந்திரசேகர் என்பவரிடம் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளை வாங்குவதுபோல் நடித்து கொள்ளையடித்த ஜான் லாயர், ரித்தீஷ், விஜய், அருண் பாண்டியன் ஆகியோர் கைது.

10. கரூரில் கோயில் திருவிழாவில் வன்முறை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோயில் திருவிழாவின்போது நடனம் ஆடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக் குத்து. ஒருவர் உயிரிழப்பு.