டாப் 10 தமிழ் நியூஸ்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் ரெய்டு முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை!
கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் ரெய்டு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி, ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கே.என்.நேருக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை அடத்தி வருகின்றனர். பெரம்பலூர் எம்.பி அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை தொடர்கிறது.
2.தமிழிசை பேட்டி
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது முதலமைச்சர் எதற்காக ஊட்டிக்கு சென்றார்..? மக்க்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
3.வக்ஃபு சட்டம் - திமுக இன்று வழக்கு
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.
4.இன்று ஐபிஎல் டிக்கெட் விற்பனை
ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.
5.இன்று மழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
6.திருவாரூர் தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரோட்டம். 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்ட தேர் 4 வீதிகள் வழியாக வலம் வரும். 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7.மழைநீரில் சிக்கி ஒருவர் பலி
மதுரை வைகை ஆற்று மேம்பாலத்தின் கிழ்ப்பகுதியில் மழைநீரில் சிக்கி ராஜேஷ் என்பவர் உயிரிழப்பு.
8.டாஸ்மாக் கடையில் ஸ்வைப் மிஷின் கொள்ளை
சென்னை தேனாம்பேட்டை டாஸ்மாக் கடையில் ஸ்வைப் மெஷினை தூக்கி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
9.ஓகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
10.அரிசி கடத்தியவர் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சக்திவேல் என்பவரை கைது, செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நடவடிக்கை. அவரிடம் இருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.
