தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் Ed ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 09:33 AM IST

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை, திருவள்ளூர் வீரகாகவ பெருமாள் கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு, ஊட்டியில் உள்ள தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

1.சென்னையில் ED ரெய்டு

சென்னையில் கோயம்பேடு, தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை.

2.கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஹரிஹரன், வெங்கட்ரமணன், வீரராகவன் ஆகியோர் சந்தியாவந்தனம் செய்யும் போது படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழப்பு.

3.தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை

யானைகள் கூட்டம் நடமாடுவதால் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் தடை விதிப்பு.

4.விரைவில் வணிகர் நாள் அரசாணை

தமிழ்நாட்டில் மே 5-ஆம் தேதி வணிகர் நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும் என அறிவிப்பு.

5.வைகோ மருத்துவமனையில் அனுமதி

வீட்டில் தவறி விழுந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

6.வடகாட்டில் வன்முறை - தீவைப்பு

புதுக்கோட்டை அருகே வடகாடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை. பெட்ரோல் போடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வீடு, இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு.

7.ஜே.பி.நட்டா பயணம் தொடர்பாக விளக்கம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் பயணத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என தமிழக காவல்துறை விளக்கம்.

8.கவுண்டமணி மனைவிக்கு இன்று இறுதிச்சடங்கு

நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தியின் உடல், இன்று காலை 10 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்‌ செய்யப்பட உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் தற்போது இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

9.4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

10.பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜகவில் உள்ள பெண் நிர்வாகி சரண்யா வெட்டிக் கொலை.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.