இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published Apr 30, 2025 10:19 AM IST

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் பேச்சு, பாஜக-தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி, கடன் வசூல் ஒழுங்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம், தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

2.பாஜக-தவெக கூட்டணியா?

பாஜக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்கு தெரியவில்லை. நேற்று மோடியை சந்தித்தேன். இன்று உங்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திப்போம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

3.சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

கடன் வசூல் ஒழுங்கு மசோதா, மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் நியமன மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டு சிறை அல்லது 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

4.வெயில் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கரூர், ஈரோடு, வேலூர், திருச்சியில் வெயில் 100°F-ஐ தாண்டியது.

5.மழை அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும். புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரத்தில் மழை பதிவு.

6.தாம்பரத்தில் வக்பு சட்ட எதிர்ப்பு பேரணி

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தாம்பரத்தில் 300 அடி தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

7.தனியார் கல்லூரி வழக்கு

தனியார் கல்லூரி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம். பாதி தொகையை கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரனிடம் வசூலிக்க உத்தரவு. 12 பணியாளர்களுக்கு தலா 1.5 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவு.

8.கள்ள நோட்டு வழக்கு
திருச்சி மாவட்டம் ஆழவந்தான் நல்லூர் பகுதியில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் கைது. கலர் பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் கள்ள நோட்டுகள் பறிமுதல்.

9.லஞ்ச வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத 1.56 லட்ச ரூபாய் பறிமுதல். ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வசூலித்ததாக புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.

10.மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா முதல் நாள் கோலாகலமாக தொடங்கியது. கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், சிம்ம வாகனத்தில் மீனாட்சியும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.