தலைப்பு செய்திகள்: கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு முதல் விஜய் பேச்சு வரை!
கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு, மக்களை ஏமாற்றி இனி ஆட்சிக்கு வர முடியாது என விஜய் பேச்சு, வலுக்கட்டாய கடன் வசூல் செய்தால் சிறை செல்லும் மசோதா தாக்கல், பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோவுக்கு எதிராக மனு அளிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
கோவை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் சம்பத் குமார் உள்ளிட்டோர் மீது கோவை விமான நிலையத்தில் வழக்குப்பதிவு.
2.மக்களை ஏமாற்றுவது இனி நடக்காது
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது இனி நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு.
3.விஜய் மீது தமிழிசை விமர்சனம்
Work From Home-இல் இருந்து Work From Field-ற்கு விஜய் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி.
4.உதயநிதி மசோதா தாக்கல்
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணத்தை வசூலித்தால் சிறை தண்டனைக்கு வழி வகை செய்யும் புதிய சட்டமசோதாவை சட்டப்பேரவயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
5.பட்டா தர அரசாணை
தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபனையற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியீடு. கடந்த 17ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 80 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.
6.மெட்ரோவுக்கு கடன் தர வேண்டாம் என மனு
பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் என ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு கடிதம் எழுதி உள்ளது.
7.8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுப்பு.
9.சித்திரை திருவிழா முகூர்த்தகால் ஊன்றல்
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு திருப்பணிகள் தொடக்கம். மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
10. போக்சோவில் கைது
மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்ய சென்ற நபர் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
