தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
”சென்னை மெரினாவில் ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி, சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலனை, நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!”

தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.சென்னை மெரினாவில் பேரணி
சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி. இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றும் வகையில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான பிரம்மாண்ட பேரணி தீவுதடலில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிறைவு. பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
2.ஐபிஎல் போட்டிகள்
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மைதானங்களில் எஞ்சி உள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலனை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.