தலைப்பு செய்திகள்: கோவையில் உரையாற்றும் விஜய் முதல் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு வரை!
கோவை பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய், டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு, சேலம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம், மழை எச்சரிக்கை, காஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.கோவையில் விஜய் பேசுகிறார்
அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கோவையில் இன்றும் நாளையும் வாக்குவ்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
2.டாஸ்மாக் நிறுவனம் மேல் முறையீடு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
3.பட்டாசு விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம்
சேலம் காடையாம்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
4.மழை எச்சரிக்கை
தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.
5.ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா” என முழங்கி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
6.முதல்வர் மீது ஆளுநர் விமர்சனம்
ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்பதை தடுக்க காவல்துறையை பயன்படுத்தி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்.
7.மோடி அரசு மீது விமர்சனம்
ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது மோடி அரசு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் பதில்.
8.ஆளுநருக்கு எதிராக மதிமுக போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி 5 மண்டலங்களில் மதிமுக ஆர்ப்பட்டம் நடத்துகிறது. மதுரை முனிச்சாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ எம்பி கலந்து கொள்கிறார்.
9.காஷ்மீர் தாக்குதலுக்கு ரஜினி கண்டனம்
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. தாக்குதலின் பின்னணியில் இருப்போரை கண்டறிந்து தண்டனை தர வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபட கனவிலும் நினைக்க கூடாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.
10.கொடிக்கம்பம் தீர்ப்பு -பெ.சண்முகம் மனு!
சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவில், தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு. கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவிப்பு.

டாபிக்ஸ்