TOP 10 NEWS: ’பரந்தூருக்கு புறப்பட்டார் விஜய்! கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பரந்தூர் மக்களை சந்திக்க செல்லும் விஜய், விஜய்யின் வருகைக்கு காவல்துறை கட்டுப்பாடு, கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் மர்ம மரணம், தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.பரந்தூர் புறப்பட்டார் விஜய்
பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
2. 36வது தலைவராக பரந்தூர் செல்லும் விஜய்!
தவெக தலைவர் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை 36ஆவது நபராக சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார். விமான நிலையத்திற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 35 பேர் சந்தித்து உள்ளனர்.
3.காவல்துறை கட்டுப்பாடு - புஸ்ஸி ஆனந்த் பேட்டி
பாதிக்கப்பட்ட இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் தலைவர் விஜயின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பேட்டி.
4.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5.மாமியார், மாமனாரை கொன்ற மருமகன் கைது!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாத புரத்தில் குடும்ப பிரச்னையால் மாமனார், மாமியாரை, மருமகன் வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருமகன் மரியகுமாரை பெருமாள்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6.சமூக ஆர்வலர் மர்ம மரணம்
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7.சமூக ஆர்வலர் கொலைக்கு வேல்முருகன் கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராட்டிய நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொலை செய்யஒப்பட்டு உள்ளனர் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை.
8.திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
இயற்கை வளங்களை காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
9.தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்!
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு ஏற்படுத்தி தர வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய கச்சத்தீவுதான் காரணம், கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து வருகிறேன் என மதுரை ஆதீனம் பேட்டி.
10.தமிழ்நாடு பாஜகவிற்கு புதிய தலைவர்கள்!
தமிழ்நாடு பாஜகவில் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டு உள்ள 66 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
