TOP 10 NEWS: ’மீனவர்கள் கைது! வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தமிழக மீனவர்கள் கைது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு, கொடைக்கானலில் உறைபனி, பாம்பன் பாலத்தில் ஆய்வு, விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.இலங்கை கடற்படையால் 17 மீனவர்கள் கைது
தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2.வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்!
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரட்த்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
3.கொடைக்கானலில் உறைபனி!
கொடைக்கானலில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில் இன்று முதல் அங்கு உறைபனி பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மலைகள், புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்படுகின்றன.
4.கத்தியை காட்டி கொள்ளை- 3 பேர் கைது!
சென்னை பூங்கா நகரில் கடந்த 14ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற 3 பேர் கைது.
5.பாம்பன் பாலத்தில் ஆய்வு
ராமேஸ்வரம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு. செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ஆய்வு மேற்கொண்டார். 3 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று பாலம் அமைப்புப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ளன.
6.ரகசிய கேமரா வைத்த 2 பேர் கைது
ராமேஸ்வரத்தில் கடற்கரைக்கு முன்பாகவே உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்த ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய 2 நபர்கள் கைது.
7.புகையிலை விற்ற 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குமாரசாமி (36), நாகூர்கனி (59), நிஜாமுதீன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 107 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
8.மெட்ரோ ரயில் சேவை தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக சென்னை விமானநிலையம் - விம்கோ நகருக்கு 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றது.
9.விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடந்த்தி வரப்பட்ட 3.6 கோடி மதிப்பு கொண்ட உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
10.பாஜக டெபாசிட் இழக்கும்!
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழக்கு. மக்கள் மீதான நம்பிக்கை மூலமே 200 தொகுதியில் வெல்வோம் என முதலமைச்சர் கூறுகிறார் என மதிமுக எம்.பி.துரை வைகோ பேட்டி.
டாபிக்ஸ்