TOP 10 NEWS: அண்ணா பல்கலை.யில் வன்கொடுமை! வேலு நாச்சியாருக்கு விஜய் புகழாரம்! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், வேலுநாச்சியாருக்கு விஜய் புகழாரம், வாஜ்பாய்க்கு முதலமைச்சர் புகழாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.அண்ணா பல்கலை.கலையில் பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 20 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பணியில் இருந்த காவலாளிகள் கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2.அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
3.அண்ணாமலை கண்டனம்
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
