TOP 10 NEWS: திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி! லாட்டரி அதிபர் வீட்டில் 12 கோடி பறிமுதல்! டாப் 10 நியூஸ்!
திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, சில்வர் பேப்பருக்கு தடை, கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி! லாட்டரி அதிபர் வீட்டில் 12 கோடி பறிமுதல்! டாப் 10 நியூஸ்!
1.யானை மிதித்து 2 பேர் பலி
திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் உதயகுமார் மற்றும் சிவபாலன் உட்பட இருவர் உயிரிழப்பு.
2.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
3. சில்வர் பேப்பருக்கு தடை
உணவகங்களில் பார்சலுக்கு சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த உணவுப்பாதுகாப்புத்துறை தடைவிதிப்பு. தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து 5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
