TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, சப்தகிரி விரைவு ரயில் நிறுத்தம், மதுரையில் 24 மணி நேர விமான சேவை, புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு, ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை முதல் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு வரை! டாப் 10 நியூஸ்!
1.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்ககடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெறும்; அடுத்த 12 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2.6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
3.சப்தகிரி விரைவு ரயில் நிறுத்தம்
திருவள்ளூர் லோகோ பைலட்டுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரயில் வழியில் நிறுத்தம். லோகோ பைலட் யுகேந்திரன் வயிற்று வலியால் துடித்த நிலையில், நேற்று இரவு திருவள்ளூரில் ரயிலை நிறுத்தினார். யுகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்று லோகோ பைலட் வைத்து ரயில் இயக்கப்பட்டது.