TOP 10 NEWS: வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு! ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
புறநகர் ரயில்களில் 8.5 லட்சம் பேர் பயணம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு! ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
தமிழ்நாட்டில் இன்று (27-01-2025) நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தினமும் 8.5 லட்சம் பேர் பயணம்!
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணிப்பதாக தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்து உள்ளார். மேலும் பிற ரயில்களில் 3 லட்சம் பேர் சேர்த்து மொத்தமாக நாள் ஒன்றுக்கு 11.5 லட்சம் பேர் ரயில்களில் பயணம்.
2.சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே, சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். மோகன்ராஜ், ஹரிஷ் இருவரும் வேகமாக செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பைக் விழுந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
