Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!

Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!

Divya Sekar HT Tamil Published Feb 12, 2025 11:04 AM IST
Divya Sekar HT Tamil
Published Feb 12, 2025 11:04 AM IST

Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள், தவெகவின் வீட்டிற்கு ஒரு வாக்கு உறுதி திட்டம் குறித்து பதிலளித்த ஜெயக்குமார், பச்சை பட்டாணியை இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது என இன்றைய டாப் 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!
Top 10 News : 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்.. மநீம தலைவரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. டாப் 10 நியூஸ்!

1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்!

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் சென்னையில் பிப்ரவரி 24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்வர் மருந்தகங்களில் குறைந்தவிலைக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.

பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!

விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி சத்தியபிரபு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே இரு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி 35 என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவரது சகோதரி கஸ்தூரி 33, உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாம்சங் தொழிலாளர்கள் 8 வது நாள் உள்ளிருப்பு போராட்டம்

3 தொழிலாளர்களை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சக தொழிலாளர்கள் கடந்த 5ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5ம் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து 8 வது நாளாக தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவெகவின் வீட்டிற்கு ஒரு வாக்கு உறுதி திட்டம் குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

இரண்டாவது நாளாக பிரசாந்த் கிஷோருடன் தவெக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் வீட்டிற்கு ஒரு வாக்கு என தவெக திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். அவர்கள் கட்சி குறித்து நான் கருத்து கூற ஏதும் இல்லை. ஆனால் விஜய் எங்களுக்கு எதிரி அல்ல என கூறியுள்ளார்.

போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் - டிஐஜி அபிநவ்குமார் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.  இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். இதனிடையே, காவல்நிலைய சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு, பணியில் இருந்த போலீஸார், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்

செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் உட்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

3 மாதம் காலம் வெளிநாடு சென்றிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில் கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்தித்துள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனை நேரில் சந்தித்ததாக தகவல். 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், நடப்பு அரசியல் சூழல் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை அருகே ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு 

உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் தாய் மகன் சடலமாக குளத்தில் மிதந்து கிடந்த நிலையில் கணவர் அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்று தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு சரிந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பச்சை பட்டாணி இறக்குமதி - 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது!

சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை சென்னை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு என கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.