TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் ஈபிஎஸ்! ஈவிகேஎஸ்க்கு அரசு மரியாதை!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அதிமுக பொதுக்குழு கூட்டம், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை, கஞ்சா விற்பனை குறித்து ராமதாஸ் வேதனை, மழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
பிற்பகல் வரை தமிழ்நாட்டில் நடந்த டாப் 10 செய்திகளின் விவரம் இதோ:-
1.கொள்கைதான் நிலையானது
கூட்டணி வரும் போகும்; ஆனால் கொள்கை நிலையானது; தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுகதான். 2021ஆம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியில் அமர்ந்ததாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
2.ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை
மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொது வாழ்வை போற்றும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
3.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
இன்று முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளின் மிதமான மழையும் டிசம்பர் 18ஆம் தேதி அன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
4.கஞ்சா விற்பனை குறித்து கேள்வி
தமிழ்நாட்டில் எங்கும் நீக்கமற கஞ்சா நிறைந்து உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் போல் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை என்ற தண்டனை தரும் சட்டத்தை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு.
5.ஆதவ் அர்ஜூனா மீது திருமா விமர்சனம்
ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை தெரிவிக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
6.ராமதாஸ் குறித்து அன்புமணி பேச்சு
ஐயா ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும். எந்த சமுதாயத்திற்கு பிரச்னை என்றாலும் வந்து நிற்பவர் அவர்தான். ஐயா ராமதாஸ் வந்த பின்னர் வட தமிழகம் அமைதியாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் தினமும் கலவரம் நடந்தது என அன்புமணி ராமதாஸ் பேச்சு.
7.தமிழக அரசு மீது வானதி விமர்சனம்
அதிக வரி செலுத்தும் கோவை மாநகரின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்து உள்ளன. தரமான வாழ்கை நடத்துவதற்காக கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தரவில்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி.
8.கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
வெள்ள பெருக்கு காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு 3ஆவது நாளாக வனத்துறை தடை விதித்து உள்ளது.
9. ஊடகங்கள் மீது விமர்சனம்
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை நம்பி அதிமுக கிடையாது. கண்ணிருந்தும் காட்டாத குருடர்களே எங்கள் கூட்டத்தை பாருங்கள். எங்கே இங்கு கருத்து வேறுபாடு உள்ளது. 2026இல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் உளவியல் ரீதியாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கின்றது என சி.வி.சண்முகம் பேச்சு
10. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
டாபிக்ஸ்