Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

Divya Sekar HT Tamil Published Nov 15, 2024 09:22 AM IST
Divya Sekar HT Tamil
Published Nov 15, 2024 09:22 AM IST

லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம், இன்று 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!
Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை. கோவை துடியலூரில் உள்ள வீடு அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் மத்திய போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை.சென்னையிலும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நீடிக்கிறது.விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களிலும் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில் சோதனை

21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 12-ந் தேதி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இருப்பினும், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) மற்றும் 17-ஆம் தேதி மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெயங்கொண்டம் சென்றார். இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் களஆய்வு செய்யும் அவர், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1000 கோடியில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 21,862 பயனாளிகளுக்கு ரூ.174 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பொது மக்கள் குறைதீர் முகாம்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்டக் காவல் துணை ஆணையர் கூத்தலிங்கம் தலைமையில் பொது மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. 35 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழை பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 3 செ.மீ, பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூவிருந்தவல்லியில் தலா 2 செ.மீ மழை பதிவு. ஆர்.கே.பேட்டை, ஆவடி, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

டாக்டருக்கு கத்திக்குத்து கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம்

கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவத்தையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், காலி பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ரூ.3 கோடி யானைத்தந்த பொம்மைகள் பறிமுதல்

விழுப்புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விழுப்புரம் வனத்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தியபோது யானை தந்தத்தில் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை விற்பனை செய்ய வந்த திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 5 பேரையும், வாங்க வந்த 7 பேரையும் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து கார், மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்திலான பொம்மைகளின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

புழல் ஏரிக்கு நீர்வரத்து சரிவு

3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2403 மில்லியன் கன அடியாக உள்ளது. நேற்று 298 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 242 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

சோழவரம் ஏரி :1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 115 மில்லியன் கனஅடியாக உள்ளது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 35 கனஅடியாக சரிவு.

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரி : 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது. மீண்டும் 15 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது

சென்னை குடிநீர் ஏரிகளில் 44.02% நீர் இருப்பு : சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 44.02% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 5.175 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.