ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Published Mar 25, 2025 10:03 AM IST

டாப் 10 தமிழ் நியூஸ்: உயரும் சுங்க கட்டணம், வானிலை அப்டேட், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் முதல் தமிழகத்தில் உயரும் சுங்க கட்டணம் வரை - டாப் 10 நியூஸ்

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. கோடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனைசெய்யப்படுகிறது . டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. WWW.CHENNAISUPERKINGS.COM என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். இரு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது.

வானிலை அப்டேட்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 27 முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குளு குளு ரயில்..

சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல். கடற்கரை - செங்கல்பட்டு இடையே விரைவு ரயில் (FAST) தடத்தில் இரு சேவைகள், தாம்பரம் - கடற்கரை இடையே ஒரு சேவை இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாமல் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் உள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாய் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சென்னை மாநகர காவல் மற்றும் காவல் ஆணையர் குறித்து சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே முன்வைத்திருந்ததால் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது. 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க டிஜிபி மற்றும் நெல்லை ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பேசப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

டாஸ்மாக் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்!

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.

உயரும் சுங்க கட்டணம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும்புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ25 கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது.