குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 11:11 AM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் தேர்வு வரும் ஜூலை மாதம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யும் ஒரு அரசு அமைப்பாகும். இது, தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி, அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆணையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்து உள்ளது.

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் அரசு பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 2025 ஆம் ஆண்டு வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்விற்கு இன்று(25/04/2025 ) முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு வாயிலாக 3,935 பணியிடங்கள் நிரப்பபடும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2025 ஆம் ஆண்டு ஒரு பொன்னான வாய்ப்பு

வரும் 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வர இருப்பதால் இந்த ஆண்டு பல போட்டித் தேர்வுகள் நடக்கலாம் என தேர்வாளர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது முதல் தேர்விற்கான அறிவிப்பு வந்து தேர்வாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. அதிலும் இந்த 2025 ஆம் ஆண்டில் மேலும் பல தேர்வுகள் நடக்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி இயக்குனர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.