MDMK: மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள்.. வைகோவுக்கு மூத்த நிர்வாகி கடிதம்!
Tiruppur Duraisamy Letter: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்றும் திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் வைகோவின் பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி வைகோவை ஆதரித்தனர்.
ஆனால் வைகோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக வைகோவை ஆதரித்து திமுகவில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணி தலைவர்களும், தோழர்களும் மதிமுகவை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் திமுகவிற்கு சென்று விட்டனர்.