AIADMK: '3 அணிகளும் ஒன்றாக 2024 தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது'-வி.கே. சசிகலா
”எல்லோரையும் ஒன்றாக சேர்த்து கொண்டு செல்வதுதான் எனது வேலை, இதனை ஏற்கெனவே ஜானகி அம்மா இருந்த காலகட்டத்திலேயே இதனை நான் செய்துள்ளேன்”
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மூன்று ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளார்கள் அதனை பிரதமர் திறந்து வைக்கிறார். எதிர்க்கட்சிகள் இதனை இந்தியாவிற்கு பெருமை என்று நினைத்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் இருக்கிறோம் என்று தெரிவிப்பதற்காக் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர் என்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்
டிடிவி தினகரனை சந்தித்துள்ள ஓபிஎஸ் உங்களை சந்திப்பதாக சொல்லி உள்ளாரே; சந்தித்தால் அரசியலில் என்ன மாற்றம் நடக்கும்? என்ற கேள்விக்கு, மாற்றம் 2024 தேர்தலில் உங்களுக்கு தெரியும். இந்த சந்திப்பு நிச்சயம் நடக்கும். அனைவரும் ஒன்றுதான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.
கட்சி என்று இருந்தால் அதில் தொண்டர்கள் விருப்பம்தான் என்றும் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் தொண்டர்கள் விருப்பம் என்ன என்பது தமிழ்நாடு மக்களுக்கும் தெரியும்.
கட்சிக்காரர்கள் ஆதரவு பொதுமக்கள் ஆதரவு இரண்டும் இருந்தால்தான் ஒரு தலைமையை சொல்ல முடியும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது வருங்கால தேர்தலில் அதனை பார்ப்பீர்கள்.
எல்லோரையும் ஒன்றாக சேர்த்து கொண்டு செல்வதுதான் எனது வேலை, இதனை ஏற்கெனவே ஜானகி அம்மா இருந்த காலகட்டத்திலேயே இதனை நான் செய்துள்ளேன்.
வரும் 2024 தேர்தலில் மூன்று அணிகளும் நிச்சயமாக இணைந்தே தேர்தலை சந்திப்போம் அதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளது என சசிகலா தெரிவித்தார்.