தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Temple Lands Should Be Used Only For Religious Functions, Says Madras Hc Madurai Bench

Madurai hc: கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது - நீதிமன்றம்

Karthikeyan S HT Tamil
Nov 25, 2022 07:14 PM IST

மதுரை: கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடமாக பயன்படுத்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் இந்த கருத்தை கூறியுள்ளனர்.

திருச்செந்தூர் கடற்கரை (கோப்புப்படம்)
திருச்செந்தூர் கடற்கரை (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இடுகாட்டுக்கு வேறு இடம் ஒதுக்கவும், கோயில் இடத்தை பக்தர்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோயில் இடத்தை மீட்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் வருவாய் அதிகாரிகள் கோயில் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருவாய் அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்