1000 கோடி டாஸ்மாக் முறைகேடு: ED ரெய்டு எதிரொலி! தொழிலதிபர் ரதீஷ் ஓட்டம்? வீட்டுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
“ரதீஷ் அங்கு இல்லாத நிலையில், வீடு திறந்தே இருந்தது. சோதனை முடிந்த பின்னர், நேற்று இரவு 10 மணியளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டைப் பூட்டி, சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்”

1000 கோடி டாஸ்மாக் முறைகேடு: ED ரெய்டு எதிரொலி! தொழிலதிபர் ரதீஷ் ஓட்டம்? வீட்டுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு வழக்கில் அமலக்கத்துறை ரெய்டு தொடரும் நிலையில் தொழிலதிபர் ரதீஷ் தலைமறைவானதால் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரதீஷை அமலாக்கத் துறை தேடி வருகிறது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள், அவர் வீட்டில் இல்லாததால், வீட்டைப் பூட்டி சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
