Tamilnadu Weather Update: ‘வர்தா முதல் ஃபெஞ்சல் வரை!’ கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை சூறையாடிய டாப் 8 புயல்கள்!
கடலோர மாநிலமான தமிழ்நாட்டிற்கு புயல்கள் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பல புயல்க கடும் பாதிப்பை ஏற்படுத்தி சென்று உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பாதித்த முக்கிய புயல்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே:-
1. வர்தா புயல் (டிசம்பர் 12, 2016)
தமிழ்நாட்டைத் தாக்கிய மிக அழிவுகரமான புயல்களில் ஒன்று வர்தா புயல். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்றுடன் சென்னைக்கு அருகே பழவேற்காடு கரையைக் கடந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை சீர்குலைத்தது. 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2. ஓகி புயல் (2017)
ஓகி புயல் முதன்மையாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளை பாதித்தாலும், அது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. கனமழை, வெள்ளம் மற்றும் உயிர் சேதத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் கடலில் காணாமல் போகினர்.
3. கஜா புயல் (நவம்பர் 15, 2018)
கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது, மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் விவசாயம், குறிப்பாக தென்னந்தோப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது.
4. நிவர் சூறாவளி (நவம்பர் 25, 2020)
புதுச்சேரி அருகே நிவர் புயல் தாக்கி, கடலூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை பாதித்தது. இந்த சூறாவளியால் கனமழை பெய்து, தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் குறைந்தது, ஆனால் சொத்து சேதம் குறிப்பிடத்தக்கது.
5. புரேவி புயல் (டிசம்பர் 4, 2020)
புரேவி புயல் கரையை கடக்கும் முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, ஆனால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. வெள்ளம் மற்றும் பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தன.
6. மாண்டஸ் புயல் (டிசம்பர் 9, 2022)
மண்டஸ் புயல் ஆனது புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடந்தது, இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் விழுந்த மரங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தன. சென்னையில் கடும் வெள்ள பாதிப்பை
7. மிக்ஜாம் புயல் (2023)
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) ஆனது டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 அன்று பகல் வேளையில் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்துடன் காற்று வீசியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தன.
8.ஃபெஞ்சல் புயல் (2024)
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆனது கடந்த நவம்பர் 29ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. கரையை கடந்த பின்னும் இதன் வலுவை இழக்காததால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றுப்படுகைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.
டாபிக்ஸ்