10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!

10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Updated May 16, 2025 10:28 AM IST

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் வருகை புரியாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்.

10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!
10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!

மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக சான்றிதழ்

10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிழ் பெறுவதற்கும், மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை பெறுவதற்கும், அனைத்து பள்ளிகளும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 19.05.2025 முதல் பதிவிறக்கம் செய்யலாம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை காலை 10 மணி முதல் பார்க்கலாம், பிளஸ் 1 மாணவர்கள் மதியம் 2 மணி முதல் மதிப்பெண் விவரங்களை அறியலாம்.

விடைத்தாள் நகல் கோருதல்

10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் நகல் (Scan Copy of Answer Sheets) கோருவதற்கு 20.05.2025 முதல் 24.05.2025 வரை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

துணைத் தேர்வு அறிவிப்பு

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் வருகை புரியாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்.

துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் 22.05.2025 முதல் 06.06.2025 வரை தங்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வு இயக்கக சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு கல்வித்துறையின் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறித்து பெருமிதம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் உழைப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு கல்வியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது,” என்று கூறினார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் உயர வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.