Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?
அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்க வேண்டிய மில்க் அனைலைசர் இயந்திரத்தை 82லட்சம் ரூபாய்க்கு வாங்கி தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற 18கோடி ரூபாய்க்கு மேலான இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் தயாரித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை
இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு வரவேற்பிற்குரியது, அது போல் தீபாவளி இனிப்பு, C/F நியமனம், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் பால்வளத்துறை, ஆவின் அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் தமிழ்நாடு காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கினை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இவ்வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு விருப்பம் இல்லை என அதிருப்தி தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது சிபிஐ 3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.
