சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Published Jun 19, 2025 11:44 AM IST

”ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த நடவடிக்கை தொடரும் என வாதம்”

சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

இந்த வழக்கில், ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர், ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் வாதிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இடைநீக்கம் தொடர வேண்டும் எனவும் அரசு தரப்பு வலியுறுத்தியது.

நீதிபதிகள் இடைநீக்கம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் தெளிவாக, "பணியிடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு எந்த எண்ணமும் இல்லை" என்று பதிலளிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக இடைநீக்க உத்தரவு ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சமீபகாலமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் அடுத்த அமர்வில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்து முடிவுகள் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.