TN Assembly: உரையை வாசிக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார் ஆளுநர்! சட்டப்பேரவையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Assembly: உரையை வாசிக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார் ஆளுநர்! சட்டப்பேரவையில் நடந்தது என்ன? இதோ முழு விவரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் உரையை வாசிப்பதற்காக ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோஷம் எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் ’யார் அந்த சார்?’ என்ற கோஷத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் பதாகைகளை காட்டி கோஷம் எழுப்பினர். அதே வேளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், வேல்முருகனும் கவர்னருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.