'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு’ - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு’ - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு

'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு’ - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு

Marimuthu M HT Tamil Published Apr 08, 2025 05:48 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 08, 2025 05:48 PM IST

டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு’ - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு
'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு’ - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு

இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, ‘’ இந்த டாஸ்மாக் ஊழலில் டாஸ்மாக் நிறுவனம், சாராய ஆலைகள், பாட்டில் ஆலை ஆகிய மூன்று நிறுவனங்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் பாட்டிலில் கூடுதலாக விலை வைத்து விற்றல், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் எந்த ஆலைக்கு ஒப்பந்தம் கொடுக்கவேண்டும் என்பதில் நடந்த ஊழல், எந்த பாட்டிலை வாங்கவேண்டும் என்பதில் நடந்த ஊழல்’’ அதனைப் பட்டியலிட்டு பேசினார்.

டாஸ்மாக் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்குகள்:

அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, டிஸ்டில்லரி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கடுமையான நிதி மோசடி கணக்கில் வராத பணம் மற்றும் சட்டவிரோத கொடுப்பனவுகள் மூலம் கண்டறிந்து செய்தி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம், விசாரணை என்ற போர்வையில் தனது ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், மாநிலத்தின் பிராந்திய எல்லைக்குள் குற்றத்தை விசாரிக்கும் அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை மீறும் செயல் என்று அறிவிக்கவும் அது கோரியது.

கடந்த மார்ச் மாதத்தொடக்கத்தில் டாஸ்மாக் வளாகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறைக்கு, டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக இருக்கும் எஃப்.ஐ.ஆர் மற்றும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையின் (ஈ.சி.ஐ.ஆர்) நகல்களை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் மார்ச் 20அன்று உத்தரவிட்டது.

டாஸ்மாக் தலைமையகத்தில் மேற்கொண்டு சோதனை நடத்த வேண்டாம் என்று அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் வாய்மொழியாக உத்தரவிட்டது.

மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை:

இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசை கண்டித்த நீதிபதிகள்:

இதைக்கண்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘ வழக்கு விசாரணைக்கு போதே, உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால் நாங்கள் பட்டியலிட்டு இருக்கமாட்டோம் என்றும், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காகவாவது நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், இந்த மனு பொதுநலத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்டதா’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக வசைபாடினர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திலும் இவ்வழக்கு ஏற்க மறுக்கப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றத்திலும் பின்வாங்கிய தமிழ்நாடு அரசு:

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், டாஸ்மாக்கும் வழக்கு தொடர்ந்து இருந்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக, தமிழ்நாடு அரசு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு முடிவு எடுத்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மட்டும் வழக்கை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்ததாக உயர் நீதிமன்றத்தில் கூறியது. அப்போது, தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதாக இருந்தால், அது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.