’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு

’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு

Marimuthu M HT Tamil
Updated Apr 24, 2025 05:40 PM IST

- தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழுவிவரங்களை சேகரித்து வழங்கும் பணியைத் தொடங்கி இருக்கிறது.

’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு
’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு

காஷ்மீர் மாநிலத்தின் பஹல்ஹாம் நகரில் நடந்த தீவிரவாத அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம் அடைந்து இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ஆம் தேதி முதல் செல்லாது என அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்காக பாகிஸ்தானியர்கள் பெற்ற விசா வரும் 29ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவித்து இருக்கிறது. மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரைவில் வெளியேற்றுமாறு ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது.

முழுவீச்சில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை:

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இருக்கக் கூடிய பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், மத்திய அரசும் தமிழக அரசும் தமிழக காவல் துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது.

தமிழக காவல் துறையின் உதவி

குறிப்பாக, தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக மருத்துவ சிகிச்சை எடுக்க, கல்வி பயில, உறவினர்களைப் பார்க்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் குறித்த முழுவிவரங்களை தமிழ்நாடு அரசு சேகரித்து, பட்டியலிட்டு, அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு உதவுகிறது. மேலும், அவர்களைக் கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு தமிழக காவல் துறை உதவி வருகிறது.