‘பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மூலம் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி’-தமிழக அரசு கண்டனம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் உள்ள NDMC மாநாட்டு மண்டபத்தில் 59வது பொதுக்குழு கூட்டத்தின் நடந்தது.

‘பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மூலம் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி’-தமிழக அரசு கண்டனம் (@ncert)
டெல்லியில் நடைபெற்ற NCERT கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்துத்துவா கொள்கையாக உள்ளது என குற்றம்சாட்டியது.
பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மூலம் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இந்தக் கூட்டத்தை NCERT செயலாளர் கூட்டினார்.
