Pongal Parisu ‘ரொக்கம் இல்லை.. பச்சரிசி.. சர்க்கரை.. கரும்பு மட்டுமே’ தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு!
Pongal Parisu 2025: இந்த முறை ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு வராத நிலையில், பொருட்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
தமிழக அரசு சார்பில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு இதோ:
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகை உடன் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறைஅது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.