‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’

‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’

Kathiravan V HT Tamil
Published May 09, 2025 04:40 PM IST

”இந்த அனுமதி 2025 மே 5 முதல் 2028 மே 4 வரை அமலில் இருக்கும். இதன்மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்”

‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’
‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’

தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அனுமதி 2025 மே 5 முதல் 2028 மே 4 வரை அமலில் இருக்கும். இதன்மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்.

முதலமைச்சரின் வாக்குறுதி

வணிகர் தினத்தையொட்டி கடந்த நே 5ஆம் தேதி நடைபெற்ற நடைபெற்ற வணிகர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 24 மணி நேர கடைகளுக்கான அனுமதியை நீட்டிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் 24 மணி நேர கடைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு, அது வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்த அனுமதி 2025 ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மூலம், வணிக நிறுவனங்களுக்கு நெகிழ்வான இயக்க நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை எந்த நேரத்திலும் பெறுவதற்கு வசதியாக இருப்பதோடு, வணிகர்களின் வருவாயையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முடிவு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உதவும் வகையில் அமைந்துள்ளது.