‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’
”இந்த அனுமதி 2025 மே 5 முதல் 2028 மே 4 வரை அமலில் இருக்கும். இதன்மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்”

‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’
தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான அரசாணையை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அனுமதி 2025 மே 5 முதல் 2028 மே 4 வரை அமலில் இருக்கும். இதன்மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்.