Annamalai Arrested : கோவையில் அண்ணாமலை கைது.. தடுத்து நிறுத்திய போலீஸ்.. தடையை மீற முயன்ற போது சம்பவம்!
கோவையில் கறுப்பு தின பேரணி நடத்தி, போலீஸ் தடையை மீறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கைது செய்யப்பட்டார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில், சித்தாபுதூர் பகுதியில் இருந்து தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அவருடன் இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கண்டன பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது:
‘‘திமுக அரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. முதலமைச்சர் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயல்பட்டனர், காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த தவறியது.
கோவையில் கார் குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சத்தியமங்கலம் காட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒன்று கூடி திட்டம் தீட்டியுள்ளதாக என்.ஐ.ஏ வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல் இலக்காக பொதுமக்கள் அதிகம் கூடும் துணிக்கடையும், அடுத்த ஆறு நாட்களில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்க திட்டம் திட்டி உள்ளதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து தடுக்கவில்லை. சிலிண்டர் மற்றும் வெடிபொருட்களை காரில் கொண்டு செல்லும்போது வெடித்துள்ளது. இதனை முதலமைச்சர் விபத்து என்றே கூறி வருகிறார்.
அரசியல் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்
1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த பாஷாவின் உடலுக்கு சீமான் மற்றும் தனியரசு ஆகியோர் அஞ்சலி செலுத்தி வாக்கு அரசியலை செய்து வருகின்றனர். திருமாவளவன் அவர்களும் இதே போன்ற வாக்கு அரசியலை செய்கிறார். மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
குண்டுவெடிப்பு குற்றவாளியின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் காவல்துறையினர், பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் வழங்குவதில்லை. இந்த பேரணிக்கு வரும் பாஜக தலைவர்களை கூட வீட்டு காவலில் வைக்கின்றனர்.
தியாகிகளாக சித்தரிப்பு
திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து தான் செய்யப்படுகிறது. இது இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திருப்பி விடும் செயல் ஆகும். எனவே, மாநில அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் பயங்கரவாதத்தை கண்காணித்து தடுப்பதிலும் தீவிரவாதிகளை தண்டிப்பதிலும் உரிய வகையில் செயல்பட வேண்டும்.
டாபிக்ஸ்