12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 04:44 PM IST

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை வெளியானது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து வரும் 12 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி இருக்கிறது.

மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70%
  • மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16%
  • மாணவர்களை விட 3.54 சதவிதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்களின் எண்ணிக்கை 10,049 ஆகும்.

மேலும் படிக்க | விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!

இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71 சதவிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.