12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? - விபரம் இதோ!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை வெளியானது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9 மணியளவில் வெளியான நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து வரும் 12 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி இருக்கிறது.