மாணவர்களே! புதிய பயண அட்டை வழங்கப்படும் வரை; பழைய பஸ் பாஸ் செல்லும்; மாணவர்களுக்கு அறிவிப்பு!
புதிய பயண அட்டை வழங்கப்படும் வரை மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களே! புதிய பயண அட்டை வழங்கப்படும் வரை; பழைய பஸ் பாஸ் செல்லும்; மாணவர்களுக்கு அறிவிப்பு!
புதிய இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் (இன்று) ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐக்கள் திறக்கப்பட உள்ளன.