ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!

ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 10:24 AM IST

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ப்ளஸ் 2 பொது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி அடைந்துள்ளார்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. தற்கொலை செய்துகொண்ட மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!
ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. தற்கொலை செய்துகொண்ட மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!

மாணவி ஆா்த்திகா தோ்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சுடிதாா் துப்பட்டாவால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விபத்தில் உயிரிழந்த மாணவன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவன் முகேஷ் பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

"மே 8 அன்று காலை 9 மணிக்கு முடிவுகள்"

மே 9 அன்று வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், தற்போது ஒரு நாள் முன்னதாக மே 8 இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.