தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..
தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள எஸ்.எஸ்.சிவசங்கருக்கு தற்போது கூடுதலாக மின்சாரத்துறை இலாகா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் சந்திக்க உள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.. கூடுதல் பொறுப்பால் வரும் சவால்கள்..
திமுக தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பு
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கவனித்து வந்த இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத் துறைக்கான பொறுப்பு கூடுதலாக தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பில் சந்திக்க உள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.