’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

Kathiravan V HT Tamil
Dec 16, 2024 10:58 AM IST

ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம்

’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்
’இளையராஜா அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. 

ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உள்ளனர். 

கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றனர். இளையராஜாவுக்கு கோயில் யானையை வைத்தோ, வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.